Advertisement

மகளிர் உலகக் கோப்பை: ஆஸிக்கு எதிரான முக்கியப் போட்டியில் இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெண்கள் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்கொள்கிறது.

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரை இறுதியை உறுதி செய்து விடும். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில், தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பை குறித்து இந்தியா சிந்திக்க முடியும். இதனால் அந்த ஆட்டம் வாழ்வா சாவா என அமைந்துள்ளது. அதுதவிர மேலும் 2 லீக் ஆட்டங்கள் இந்தியாவுக்கு உள்ளன.

image

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிக்க: ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments