Advertisement

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த இந்தியா

ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீட்டித்து வருகிறது இந்திய அணி.

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகள் என பின்தங்கி இருந்தது. இந்நிலையில், இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது. ஹாமில்டனில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வெர்மா இணை ஓப்பனிங்கை தொடங்கி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்மிருதி 30 ரன்களுக்கும், ஷெஃபாலி 42 ரன்களுக்கும் ஆட்டமிழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 50 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments