Advertisement

'கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்...' - ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்

மும்பை: இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருப்பதாக சொல்லியுள்ள ராய், இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க இன்னும் 25 நாட்களே உள்ளன. இந்த சீசனில் புதிய அணியாக அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸ், மெகா ஏலத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு எடுத்தது. அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜேசன் ராய் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும், குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் மற்றும் அணியினருக்கு எனது வணக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments