Advertisement

'காயம் மட்டும் இல்லையென்றால்'... - டெல்லி அணி தொடர்பாக ஸ்ரேயாஷ் ஐயர்

புதுடெல்லி: "காயங்களும் அதிலிருந்து மீள்வது என்பதும் வலிமிகுந்தவை. என்னைப் பொறுத்தவரை வலிகளை கடந்து காயங்கள் எனக்கு ஓர் ஆசிர்வாதமாக இருந்தது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் பேசியுள்ளார்.

தற்போதைய இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரை ஸ்ரேயாஷ் ஐயர். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தும் திறன்கள் உள்ள இவர், கடந்த ஐபிஎல் சீசன்களில் டெல்லி அணியை நடத்தியதன் மூலம் அதன் நிரூபித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிய இடைவெளி ஏற்பட்டது. அது தோள்பட்டை காயம் காரணமாக அந்த இடைவெளி ஏற்பட்டது. காயத்தால் ஐபிஎல் தொடரின்போது ஸ்ரேயாஷ்க்குப் பதிலாக ரிஷப் பந்த் டெல்லி அணியை வழிநடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments