Advertisement

சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி விளையாடுவாரா? மாட்டாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, 15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதற்கு காரணம் கொரோனா கட்டுப்பாடுகளோ அல்லது அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றோ நினைக்க வேண்டாம். அதற்கான காரணத்தை சென்னை அணியின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

image

“மொயின் அலி இந்தியா வர அனுமதிக்கும் விசா அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என நம்புகிறோம். 

இந்த விசா சிக்கல் குறித்து அவரிடம் பேசினோம். தேவையான அனைத்து ஆவணங்களும் அவரது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவருக்கு விசா கிடைத்ததும் இந்தியாவுக்கு அவர் பறந்து வந்து விடுவார். அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். 

சென்னை அணி நடப்பு சீசனுக்காக சூரத் நகரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் போட்டியில் வரும் 26-ஆம் தேதி அன்று கொல்கத்தா அணியுடன் சென்னை பலப்பரீட்சை செய்கிறது. மொயின் அலி இந்தியா வந்ததும் மூன்று நாட்கள் அவர் குவாரண்டைனில் இருக்க வேண்டும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments