Advertisement

IPL 2022 | மைதானங்களில் 25%+ ரசிகர்கள் போட்டியைக் காண பிசிசிஐ அனுமதி

மும்பை: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் காண 25 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 15-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் லீக் போட்டிகளானது மகாராஷ்டிராவின் சில மைதானங்களில் மட்டும் நடைபெறவுள்ளது. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் இதற்காக நான்கு மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசன்களில் கரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த முறையும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில் குழப்பம் நீட்டித்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments