Advertisement

IPL 2022 | ஓர் அணியாக சிஎஸ்கே எப்படி? - ஜடேஜா முன் நிற்கும் பிரச்சினைகளும் சவால்களும்

இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அனல் பறக்கவுள்ளது. கடந்த சீசனில் இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் மோதியவை என்பது போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அணி எப்படி இருக்கிறது என்பது தொடர்பான சிறிய அலசல் இங்கே.

சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி சில நாட்கள் முன்பு கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜாவை வழிநடத்துவதோடு, ஒரு வீரராக மட்டுமே இந்த சீசனில் விளையாடவும் உள்ளார். இதனால் முழு எதிர்பார்ப்பும் தோனியைத் தாண்டி ஜடேஜா பக்கம் திரும்பியுள்ளது. அதற்குக் காரணம் அணியில் உள்ள பிரச்சினைகளை எப்படி அவர் கையாளப்போகிறார் என்பதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments