Advertisement

”என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” - அர்ஜென்டினா ரசிகர்களின் புகழ் பாடிய மெஸ்ஸி!

கத்தார் நாட்டில் வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் பிஃபா உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தற்போது தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 19 அணிகள் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அதில் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவும் ஒன்று. 

image

வெனிசுலா நாட்டுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 3 - 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. கால்பந்தாட்ட உலகின் சமகால வீரர்களில் ஜாம்பவான் என போற்றப்படும் மெஸ்ஸியின் சொந்த நாடு அது. அவரும் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தார். வெற்றிக்கு பிறகு மைதானத்தில் திரளாக திரண்டிருந்த சொந்த நாட்டு ரசிகர்களின் புகழை பாடியுள்ளார் அவர். 

“அர்ஜென்டினா அணிக்கும், எங்கள் மக்களுக்கும் இடையிலான பிணைப்பு இமி அளவு கூட குறையவில்லை. கோபா அமெரிக்க தொடரை நாங்கள் வென்றது முதலே நான் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறேன். மக்கள் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அது இயற்கையாக அமைந்த ஒன்று. காலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்கு சென்றாலும் அதனை நான் உணர்ந்து வருகிறேன்” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 

இந்த போட்டியில் 82-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்திருந்தார் மெஸ்ஸி. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அரங்கில் முக்கிய தொடரில் கோப்பையை வென்றிருந்தது அர்ஜென்டினா என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அர்ஜென்டினாவுக்கு சொந்த மண்ணில் இது கடைசி போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments