Advertisement

“பணிச்சுமை குறித்த கருத்துகள் குழப்பமாக உள்ளன” - பும்ராவுக்கு எதிராக பேசிய ஜாகீர் கான்

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்டின் இயக்குனர் ஜாகீர் கான், பணிச்சுமை தொடர்பான சிலரின் கருத்துகள் தன்னை 'குழப்பத்தில் ஆழ்த்துகிறது' என்று பும்ராவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.

2022-ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காரணமாக பணிச்சுமை மேலாண்மை மற்றும் முக்கிய சர்வதேச வீரர்களுக்கு போதுமான இடைவேளை வழங்குவது தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மும்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வடிவ இந்திய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி தேசிய அணியால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பும்ராவும் தொடர்ச்சியான போட்டிகள், கொரோனா பயோ பபுள் குறித்து பேசி சலசலப்பை கிளப்பி இருந்தார்.

Exclusive | Important to keep patience after injury: Zaheer Khan to Jasprit Bumrah | Cricket News – India TV

“அதிக போட்டிகளில் விளையாடுவதே முக்கியம்”

இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர்கான், “நீங்கள் என்னை நன்கு அறிந்திருந்தால், பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு பந்துவீச்சாளராக, ரிதம் இருந்தால், நீங்கள் முடிந்தவரை பல விளையாட்டுகளை விளையாட வேண்டும். இந்த பணிச்சுமை மேலாண்மை எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காயம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். உங்களுக்கு காயம் ஏற்பட்டால் உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள்,உங்கள் உடற்தகுதிக்கு வேலை செய்யுங்கள்,உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்கள் 120 சதவீதத்தை அடையுங்கள். ஆனால் நீங்கள் உடல் தகுதி மற்றும் வசதி இருந்தால், நீங்கள் முடிந்தவரை பல போட்டிகளை விளையாட வேண்டும். இந்த சீசனில் நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

Jasprit Bumrah needs to be aggressive and take extra risks: Zaheer Khan - OrissaPOST

“மும்பையின் முதல் ஆட்டம் தந்திரமான ஒன்று”

மேலும் “நாங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளை சுற்றி நிறைய ஆக்கபூர்வமான அரட்டைகள் உள்ளன. உங்களுக்குத் தெரியும், முதல் ஆட்டம் எப்போதுமே ஒரு தந்திரமான ஒன்றாகும். எல்லா முதல் ஆட்டத்திலும் நாங்கள் எப்படி இருந்தோம் என்பது பாரம்பரியமாக உங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் இதை வழக்கமாக வைத்திருக்கிறோம். மெதுவாக ஆரம்பிப்பவர்களாக இருக்கிறோம். ஆனால் திட்டங்கள் செயல்படும் விதம், போட்டியை அணுகும் விதம் ஆகியவற்றில் சிறப்பாகவே செயல்படுவோம். வரும் விளையாட்டுகளில் அந்த மாற்றத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். ” என்று நம்பிக்கையுடன் கூறினார் ஜாகீர் கான்.

முன்னதாக பும்ரா “விளையாடும்போது எனக்கு பணிச்சுமையை மேலாண்மை செய்ய கடினமாக இருக்கிறது. தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்பதால் இடையிடையே போதுமான ஓய்வும் தேவை. அது எனக்கும் அணிக்கும் அவசியமான ஒன்றாக கருதுகிறேன்.” என்று கடந்த மாதம் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அப்போதே அந்த கருத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments