Advertisement

செஸ் போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல், ஆக. 10-ம் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வரவேற்கும் விதமாக, மாவட்ட அளவில் சிறுவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட, இலவசமாக தங்குமிடத்துடன் அனுமதிக்கப்படுவர். அதன்படி, வரும் ஜூன் 17, 18-ம் தேதிகளில் செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் கல்லூரியில் 15 வயதுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட மாணவ - மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments