Advertisement

இந்திய வீரருக்கு கரோனா தொற்று: இலங்கையுடன் இன்று நடக்கவிருந்த 2-வது டி20 ஆட்டம் ஒத்திவைப்பு

இலங்கையில் பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணியில் வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இன்று நடைபெற இருந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments