Advertisement

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: அப்போது மல்லேஸ்வரி; இப்போது மீராபாய்; 21 ஆண்டுகளுக்குப் பின் பளுதூக்குதலில் பதக்கம்: யார் இந்த மீராபாய் சானு?

பளுதூக்குதல் பிரிவில் 21 ஆண்டுகளுக்குப் பின், கர்னம் மல்லேஸ்வரிக்குப் பின் மகளிர் பிரிவில் மணிப்பூர் வீராங்கனை ஷாய்கோம் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்

2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றதுதான் கடைசி. அதன்பின் 21 ஆண்டுகள் இடைவெளியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments