Advertisement

ஒலிம்பிக்: வாள் சண்டை 2-ஆவது சுற்றில் பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வாள் ‌சண்டையில் இந்திய வீராங்கனை பவானி தேவி 2ஆவது சுற்றில் தோல்வியடைந்தார்.

2-ஆவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். இதில் மனோன் புரூனட் எளிதில் வெற்றிபெற்றார். முன்னதாக இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் துனிஷிய வீராங்கனை பென் அசிசியை பவானி தேவி எளிதில் வீழ்த்தியிருந்தார்.

image

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள் சண்டையில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் ஏற்கெனவே பெற்றிருந்தார்.

இதையடுத்து ஆண்களுக்கான குழு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் அணியை இந்தியாவின் அடானு தாஸ், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கொண்ட அணி 6 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து காலிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. இதில் வலிமை மிகுந்த தென் கொரிய அணியை இந்தியா சந்திக்கிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments