Advertisement

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்.. இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. மழை காரணமாக ஒவ்வொரு அணிக்குமான இன்னிங்ஸ் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியாவுக்காக பேட்ஸ்மேன்கள் பிருத்வி ஷா (49 ரன்கள்), சஞ்சு சாம்சன் (46 ரன்கள்) மற்றும் சூரியகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினர். இந்த போட்டியில் ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக இந்தியாவுக்காக விளையாடி வருகின்றனர். 

மழை காரணமாக இந்தியா ரன் குவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தியா 47 ஓவர்களையும் முழுமையாக ஆடாதது சற்று பின்னடைவு கொடுக்கலாம். அதே நேரத்தில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுத்து வருவதால் இலங்கை அணி இந்த சுலப இலக்கை சேஸ் செய்வது கடினமாக அமையலாம். இலங்கை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிளீன் ஸ்வீப் தோல்வியை தவிர்க்கலாம். இல்லையெனில் 0 - 3 என இந்தியாவிடம் தொடரை இழக்கும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments