Advertisement

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 3வது சுற்றில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சத்யன் ஞானசேகரன் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார்.

டேபிள் டென்னிஸ் மூன்றாவது சுற்றில் ஹாங் காங் வீரர் சியுவிடம் கடுமையாக போராடினார் சத்யன் ஞானசேகர். இந்தப் போட்டி 7 கேம்கள் வரை நீடித்தது. இதில் 7-11, 11-7,11-1,11-4,11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார் சத்யன் ஞானசேகரன். இதனையடுத்து டோக்யோ ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனின் பதக்க கனவு கலைந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments