Advertisement

இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு ரூ.1 கோடி பரிசு - துபாய் தொழிலதிபர் அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்க்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்ஷீர் வயாலில் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்பு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஹாக்கி அணியின் தூணாக கருதப்படும் கோல் கீப்பரான பி.ஆர். ஸ்ரீஜேஷ் அற்புதமாக தன் பணியை செய்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றார். ஸ்ரீஜேஷ் திறமையாக கோல் கீப்பிங் பணியை செய்யவில்லை என்றால் வெண்கல் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்திருக்கும் என்றே கூறலாம்.

image

ஸ்ரீஜேஷை ஊக்குவிக்கும்விதமாக அவருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறார் துபாயைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் ஷம்ஷீர் வயாலில். இது குறித்து அவர் கூறும்போது "இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றதற்கு ஸ்ரீஜேஷின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரை கெளரவிக்கும்விதமாக ரூ.1 கோடி பரிசுத் தொகையாக கொடுக்க முன்வந்துள்ளோம்" என்றார் அறிவிப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments