ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உயரம் தாண்டுதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
View this post on Instagram
டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்த வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக மகளிர் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளி வென்றிருந்தார்.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் இது. கடந்த 2009 முதல் பாரா விளையாட்டில் அவர் விளையாடி வருகிறார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments