Advertisement

"ரொனால்டோ விளையாடுவது உறுதி! கையெழுத்தான ஒப்பந்தம்!" - மான்செஸ்டர் யுனைடெட்

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச அணிகளுடன் கால்பந்து விளையாடி வரும் அவர் முன்னணி கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர்‌ ‌யுனைடெட்‌ ‌கால்பந்தாட்ட கிளப் அணிக்காக‌ ‌விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அந்த கிளப் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

image

“இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு சர்வதேச கமிட்டியின் அனுமதி தேவைப்படுகிறது” என தங்கள் அணியில் ரொனால்டோ மீண்டும் இணைந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளது அந்த கிளப் அணி. 

இதற்கு முன்னதாக இதே அணிக்காக ரொனால்டோ 2003 முதல் 2009 வரை விளையாடி உள்ளார். அதன் மூலம் அவர் மொத்தம் 196 ஆட்டங்களில் விளையாடி 84 கோல்களை பதிவு செய்திருந்தார். ஜுவென்டஸ் கிளப் அணிக்காக அவர் விளையாடி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

“மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கு எப்போதும் என் நெஞ்சில் தனி இடம் உண்டு. நான் அந்த அணிக்காக விளையாட உள்ளது உறுதியானது முதல் வாழ்த்து மழை மெசேஜ் வடிவில் குவிந்து வருகிறது. 

இங்கிலாந்தில் மைதானம் முழுவதும் நிரம்பிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நான் விளையாடும் நாளை எதிர்நோக்கி உள்ளேன். நிச்சயம் எதிர்வரும் சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என ரொனால்டோ தெரிவித்துள்ளார். 

image

அவரை தாய் வீட்டிற்கு அழைப்பதில் பெருமை என மான்செஸ்டர் அணி தெரிவித்துள்ளது. ரொனால்டோ சீனியர் கெரியரில் இடம் பெற்று விளையாடிய முதல் வெளிநாட்டு கிளப் அணி மான்செஸ்டர் யுனைடெட் தான். அதற்கு முன்னர் வரை அவர் போர்ச்சுகல் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்தார்.

இதையும் படிக்கலாம் : "36 ரன்னில் ஆல் அவுட்; ஆனாலும் தொடரையே வென்றது இந்தியா”- இங்கிலாந்துக்கு ஹுசைன் எச்சரிக்கை  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments