கால்பந்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மனி கிளப்பில் இணைந்திருக்கிறார். இதன்மூலம் பார்சிலோனாவுக்காக சுமார் 21 ஆண்டுகள் விளையாடிய மெஸ்சி, தற்போது பிஎஸ்ஜி அணியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.
பிஎஸ்ஜியில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் மெஸ்சி. நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்னை காரணமாக பார்சிலோனா அணியிலிருந்து சில தினங்களுக்கு முன் வெளியேறியிருந்தார் மெஸ்ஸி.
பார்சிலோனாவில் இருந்து விலகும்போது உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் சிந்தியிருந்தார் மெஸ்சி. அடுத்த சில தினங்களில் பிஎஸ்ஜி அணிக்கு ஒப்பந்த அறிவிப்பை வெளியாகியுள்ளது. இருப்பினும் மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு, அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments