Advertisement

வெள்ளி வென்றது மகிழ்ச்சி, தங்கம் வெல்லாதது அதிருப்தி: மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தாலும், தங்கம் வெல்லாதது அதிருப்தியை தருவதாக இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இடம்பெற்று விளையாண்ட இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ரஷ்ய வீரர் ஜாவுர் வுகேவ்வுடன் மோதியார். விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் 4:7 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இதனால் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தாலும், தங்கம் வெல்லாதது அதிருப்தியை தருவதாக இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments