Advertisement

பாராலிம்பிக் : வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் வினோத் குமார்

டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார். F52 பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது பதக்கம் இது. 

image

முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான அவர் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்துள்ளது. அதையடுத்து அவர் சொந்த ஊரில் பலசரக்கு கடை ஒன்றை வைத்து, நடத்தி வந்துள்ளார். 

2016 ரியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தீபா மாலிக் தான் அவரது இன்ஸ்பிரேஷன். அப்போது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அதில் ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்தார். இப்போது பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments