Advertisement

பவுலர்களுக்கு நீண்ட நேரம் தண்ணி காட்டிய ரோகித் - ராகுல் : போராடி இணையை பிரித்த இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இணை நிலையான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இருவரும் 97 ரன்கள் சேர்த்திருந்தனர். நிதானமான ஆட்டத்தின் மூலம் ஆண்டர்சன், பிராட், சாம் கர்ரன், ராபின்சன் என இங்கிலாந்து அணியின் தரமான வேகப்பந்து வீச்சு பவுலர்களை எதிர்கொண்டனர். 

இறுதியில் இந்த கூட்டணியை ராபின்சன் தகர்த்தார். ரோகித்தை 36 ரன்களுக்கு வெளியேற்றினார். தற்போது இந்தியா 97 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் பின்தங்கியுள்ளது. ராகுல் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  

image

இந்த போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா லீட் எடுக்க இப்போதைக்கு வாய்ப்புள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments