Advertisement

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பத்து ஓவர்களில் கொல்கத்தா 78 ரன்கள் குவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு சீசனின் 38-வது லீக் ஆட்டத்தில் அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

image

அந்த அணிக்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயன்ற கில், சென்னை வீரர் ராயுடுவின் டைரெக்ட் ஹிட்டால் வெளியேறினார். 

இருந்தும் ராகுல் திரிபாதி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடினர். இருவரும் 40 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவர்பிளேவின் கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளுக்கு 18 ரன்களை எடுத்து அவுட்டானார். அந்த ஓவரை தாக்கூர் வீசி இருந்தார். பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் களத்திற்கு வந்தார். ஆனால் 8 ரன்களில் ஹேசல்வுட் அவரை வெளியேற்றினார். டைம் அவுட் சென்னை அணிக்கு சிறப்பாக அமைந்தது. பின்னர் நித்திஷ் ராணா களத்திற்கு வந்தார். 

image

விக்கெட் விழுந்திருந்தாலும் திரிபாதி அட்டாக்கிங் மோடில் ஆடிக்கொண்டே இருந்தார். அதன் மூலம் கொல்கத்தா அணி ஸ்கோர் போர்டில் ரன்களை கூட்டிக் கொண்டே இருந்தது. பத்து ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா 78 ரன்களை எடுத்துள்ளது. திரிபாதி 26 பந்துகளில் 40 ரன்களை குவித்துள்ளார்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments