Advertisement

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்துள்ளது. 

image

அந்த அணிக்காக களம் இறங்கிய தொடக்க வீரர்கள் ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் எதிர்பார்க்கப்பட்ட சிறப்பான தொடக்கத்தை கொடுக்க தவறினர். முதல் ஓவரில் பத்து ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார் கில். 

தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 18 ரன்களில் வெளியேறினார். ராகுல் திரிபாதி 33 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து ஆறுதல் கொடுத்தார். அந்த அணியின் கேப்டன் மோர்கன் 8 ரன்களில் அவுட்டானார். 

நித்திஷ் ராணா மற்றும் ரசல் 36 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தாக்கூர் வீசிய 17-வது ஓவரில் ரசல் போல்டானார். தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். ராணா 27 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் அதிரடியாக தனது ரன் கணக்கை துவக்கினார். 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். 

image

சென்னை அணிக்காக இந்த ஆட்டத்தில் தாக்கூர் (2), ஹேசல்வுட் (2), ஜடேஜா (1) உள்ளிட்ட பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். சாம் கரன் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரில் 19 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா. 

சென்னை அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வீரட்டுகிறது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், பிரசித் கிருஷ்ணா, ஃபெர்குயூசன் மாதிரியான பவுலர்கள் சிஎஸ்கேவுக்கு சவாலாக இருப்பார்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments