சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, தோனியின் தலைக்கு மேல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்தார். இது சாம் கரன் வீசிய நான்காவது ஓவரில் ஐந்தாவது பந்தில் நடந்தது. அந்த பந்தை பவுன்சராக வீசி இருந்தார் சாம்.
அது திரிபாதியின் பேட்டில் பட்டு சென்றது. நொடி பொழுதில் விக்கெட் கீப்பர் தோனி அதை தனது உள்ளங்கைக்குள் லாவகமாக பிடித்து அசத்தினார். அவரது அற்புதமான கேட்சை பார்த்து சென்னை அணியின் சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இருந்தும் அது அந்த ஓவரில் இரண்டாவது பவுன்சர் என்பதால் நடுவர்கள் நாட்-அவுட் கொடுத்தனர். அதனால் தோனியின் முயற்சி வீணானது. திரிபாதி 33 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
தோனிக்கு தற்போது 40 வயதாகிறது. இருந்தும் அவரது இந்த மிரட்டலான கேட்சை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கு இன்னும் வயசாகல!’ என கொண்டாடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments