இந்திய கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து அணி உடன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்தியா பவுலிங் கோச் பரத் அருண் பதில் தந்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நாளை நான்காவது போட்டி தொடங்க உள்ளது. இதுவரை அஸ்வின் இந்திய அணிக்காக ஆடும் லெவனில் இடம் பிடிக்கவில்லை. அவர் விளையாடாதது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“எங்கள் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் அஸ்வின் ஒருவர். அவர் இந்த தொடரில் இதுவரை விளையாடாதது துரதிர்ஷ்டவசமானது. சுழற்பந்து வீச்சுக்கு ஓவல் மைதானம் ஒத்துழைப்பு கொடுக்கும் என கடந்த கால வரலாறு சொல்கின்றன. இருந்தாலும் இந்த ஆட்டத்தின் ஆடுகளத்தை போட்டியின் முதல் நாளன்று காலை கணித்த பிறகே அஸ்வின் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஆறடி உயர இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முன்னெச்சரிக்கை கருதியே சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : ஆப்கான் விமான நிலையங்கள் மூடல் : தரை வழி பயணமாக எல்லையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments