Advertisement

உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை அணியில் தேர்ந்தெடுத்தமைக்கு யார் பொறுப்பேற்பது: சந்தீப் பாட்டீல் கேள்வி



உடற்தகுதியில்லாத இல்லாத நிலையில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியாவை டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்ததற்கு யாராவதுபொறுப்பேற்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்வின்னிங் ஆட்டம் ஆடவில்லை,பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments