Advertisement

“டெல்லி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை தோனி அறிவார்” - இர்பான் பதான்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை சென்னை அணியின் கேப்டன் தோனி அறிவார் என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான். 

image

“ஆடுகளத்தின் தன்மை மாற்று ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும் என்பதை தோனி துல்லியமாக அறிவார். பண்ட், ஹெட்மயர் என இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டெல்லி அணியில் உள்ளனர். அதனால் மொயின் அலி இன்று வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக பந்து வீச வேண்டியிருக்கும். 

ஷ்ரேயஸ் ஐயருக்கு எதிராக ஜடேஜா பந்து வீச வாய்ப்பு உள்ளது. இடையே ஹேசல்வுட் ஷார்ட் பால் வீசி அச்சுறுத்த வாய்ப்பு உள்ளது. தவான் நல்ல பார்மில் இருந்தாலும் அவருக்கு எதிராக தீபக் சஹார் பந்து வீச வாய்ப்புகள் உள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரையில் ரபாடா, நோர்க்யா மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்கள் சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கலாம்” என பதான் தெரிவித்துள்ளார்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments