Advertisement

இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறார் கே.எல்.ராகுல்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணி கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முடிந்த பின் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து, தான் விலகுவதாக விராட் கோலி ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதையடுத்து இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் யார் என்பதை இன்னும் ஒருசில வாரங்களில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
தற்போது, இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், எதிர்வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோகித் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments