நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நாளை (வியாழக்கிழமை) காலை தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணி பெரும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச வீரர்கள் விவரம் கணிக்கப்பட்டுள்ளது . அதன்படி மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இறங்க உள்ளனர். புஜாரா எப்போதும்போல 3வது இடத்தில் விளையாடுவார். நான்காம் இடத்தில் உள்ள விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார்.
பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் இல்லாத சூழலில், அவரது இடத்திற்கு விருத்திமான் சாஹா தேர்வு செய்யப்படுவார் என்று உறுதியாக சொல்லலாம். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 7வது இடத்தில் வாய்ப்பு நிச்சயம் எனத் தெரிகிறது.
உத்தேச இந்திய அணி
சுப்மன் கில்
மயங்க் அகர்வால்
புஜாரா
ஷ்ரேயாஸ் ஐயர்
ரஹானே (கேப்டன்)
சாஹா (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
ஆர் அஸ்வின்
முகமது சிராஜ்
இஷாந்த் சர்மா/உமேஷ் யாதவ்
இதையும் படிக்க: சதம் அடிக்காததைப் பற்றி நான் கவலைப்படவில்லை - புஜாரா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments