நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்றுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனான ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய XI அணி:
மயங்க் அகர்வால்,
ஷுபம்ன் கில்,
சேத்தேஸ்வர் புஜாரா (துணை கேப்டன்)
அஜிங்கிய ரஹானே (கேப்டன்)
ஷ்ரேயஸ் ஐயர்
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
அக்சர் படேல்
உமேஷ் யாதவ்
இஷாந்த் ஷர்மா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments