Advertisement

தென் ஆப்பிரிக்காவை 113 ரன்களில் வீழ்த்தியது இந்தியா; தகர்ந்தது செஞ்சூரியன் கோட்டை!

செஞ்சூரியன்: பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சின் துணையுடன், செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவின் கோட்டை என்று சொல்லப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் அவர் குவித்த 123 ரன்களே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments