Advertisement

132 ஆண்டுகளுக்குப் பின் மும்பை டெஸ்ட்டில் புதிய வரலாறு; 2 டெஸ்ட்டுக்கு 4 கேப்டன்கள்: புதிய சாதனை

மும்பையில் நடந்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து புதிய சாதனையை 132 ஆண்டுகளுக்குப் பின் படைத்துள்ளன.

மும்பையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. 284 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூஸிலாந்து அணி தோல்வியின் பிடியில் இருந்தபோது, கடைசி விக்கெட்டுக்கு படேல், ரவிந்திரா ஜோடி சேர்ந்து இந்திய அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments