Advertisement

தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ரிஷப் பண்ட் 34 ரன்களும், கே.எல்.ராகுல் 23 ரன்களும், ரஹானே 20 ரன்களும் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 327 ரன்கள் எடுத்திருந்தது. 

image

இந்த போட்டியில் நிச்சயம் முடிவு எட்டப்படும் வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவை தவிர எந்தவொரு அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300+ ரன்களுக்கு மேல் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை. கடந்த 1977/78 வாக்கில் ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை பெர்த் மைதானத்தில் சேஸ் செய்திருந்தது. 

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம், ஷமி பந்து வீச்சில் வெளியேறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments