மும்பையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா தரப்பில் மயாங்க் அகர்வால் 150 ரன்களை குவித்து அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் திறன்படைத்த வேகப்பந்தையும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 2 விக்கெட்டையும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட நியூசிலாந்து அணி 263 ரன்கள் பின் தங்கியிருந்தாலும் இந்தியா "பாலோ ஆன்" கொடுக்காமல் பேட்டிங் செய்ய களமிறங்கியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments