Advertisement

குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் அஸ்வின் ஏன் கதறுகிறார்? வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல: ரவி சாஸ்திரி பதிலடி

புதுடெல்லி: குல்தீப் யாதவைப் புகழ்ந்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் கதறுகிறார். ஒவ்வொருவரின் வேதனைக்கும் வெண்ணை தடவிப் பேசுவது என் வேலையல்ல என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கடந்த 2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சிட்னியில் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவைப் புகழ்ந்து, வெளிநாடுகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் எனப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதால் நான் நொறுங்கிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments