Advertisement

ரசிகர்களுக்கு அனுமதியில்லை: தெ.ஆப்பிரிக்கா-இந்தியா கிரிக்கெட் வாரியங்கள் முடிவு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments