இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்ற 2021 BWF உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார். சிந்துவை நேர் செட் கணக்கில் வீழ்த்தி தென் கொரிய வீராங்கனை An Se-young.
இந்தோனேஷிய மாஸ்டர் மற்றும் இந்தோனேஷிய ஓபன் தொடர்களில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர் BWF தொடரிலும் அதையே செய்துள்ளார். 16 - 21, 12 - 21 என சிந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார்.
ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை 21-15, 15-21, 21-19 என அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்திருந்தார் சிந்து.
Our girl P.V Sindhu on the medal podium after finishing runners-up at prestigious #BWFWorldTourFinals .
— India_AllSports (@India_AllSports) December 5, 2021
It was 3rd Final appearance for Sindhu in the year-ending tournament.
Proud of you @Pvsindhu1 pic.twitter.com/GEcOplsF3S
சர்வதேச பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து, ஐந்தாவது இடத்தில் உள்ள An Se-young-இடம் பெற்றுள்ளத் இந்த தோல்வி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் சிந்து விளையாடிய மூன்றாவது இறுதிப் போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments