Advertisement

கேப்டன் இன்னிங்ஸால் மீண்ட தென் ஆப்பிரிக்கா: இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு

பார்ல்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி போலாண்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல்முறையாக கே.எல். ராகுல் ஒருநாள் போட்டியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். என்றாலும் டாஸ் அவருக்கு கைகொடுக்கவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்ய, ஆரம்பத்திலேயே இந்திய வேகப்புயல் பும்ரா அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் மாலனை ஆறே ரன்களில் நடையைக்கட்ட வைத்தார் பும்ரா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments