Advertisement

204 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா - வான்டர் டூசன் : இந்தியாவுக்கு 297 ரன் இலக்கு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்துள்ளது. 

image

அந்த அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் நான்காவது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்து அந்த அணியின் கேப்டனா பவுமா மற்றும் ராசி வான்டர் டூசன் 204 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சதம் விளாசி அணியை மீட்டனர். 

அதில் டூசன் 96 பந்துகளில் 129 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய பவுலர்களில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். தாக்கூர் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 10 ஓவர்கள் வீசி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments