Advertisement

2-வது டெஸ்டில் தோல்வி ஏன்? - பயிற்சியாளர் திராவிட் விளக்கம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 240 ரன்கள்இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை வசப் படுத்தியது. இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது. தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியதாவது:

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் இரு அணிகளுக்குமே சவாலா னதுதான். ஆடுகளத்தின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறியது. தென் ஆப்பிரிக்க அணி தங் களுடைய 4-வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்தார்கள். ஒரு பேட்டிங் குழுவாக சில முக்கிய தருணங்களைக் கைப் பற்றி பார்ட்னர்ஷிப்களைப் பெறும் போது, அவற்றை நீண்ட நேரம் எடுத்துச் செல்ல வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments