Advertisement

இதென்ன புது விதி? - '30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே பீல்டர் குறைப்பு': டி20 போட்டிக்கு சுவாரஸ்யம் ஏற்றிய ஐசிசி


துபாய் : சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் இருந்தால், கடுமையான அபராதம் விதிப்பதைவிடுத்து, போட்டியை தலைகீழாக மாற்றும் விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல்பந்தை வீசாவிட்டால், பீல்டிங் செய்யும் அணியில் 30 யார்ட்ஸ் வட்டத்துக்குவெளியே இருக்கும் பீல்டர்களில் 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படும், மற்ற ஒரு வீரர் வட்டத்துக்கு உள்ளே வர வேண்டும் என்ற புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments