ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களும் எடுத்துள்ளன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் எல்கர், பீட்டர்சன், பவுமா மாதிரியான பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதில் பீட்டர்சன் மற்றும் பவுமா அரை சதம் கடந்து அசத்தினர்.
இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 17.5 ஓவர்கள் வீசி 61 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பவுலிங் இன்னிங்ஸாக அமைந்துள்ளது. அவர் விக்கேட்ட வீழ்த்தாமல் போயிருந்தால் தென்னாப்பிரிக்க அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கும். இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் 8 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 24 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments