தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஜோஹனஸ்பெர்கில் தொடங்கவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகியதையடுத்து கே.எல்.ராகுல் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டியையும் வென்று தென்னாப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் கே.எல்.ராகுல். விராட் கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments