Advertisement

அருமை புரிஞ்சதா! அடுத்த போட்டியில் கோலி விளையாடுவார்: தோல்விக்குக் காரணங்களை அடுக்கிய ராகுல் திராவிட்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடக்கும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாடுவார் என நம்புகிறேன் எனப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் கவனித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments