Advertisement

82-ல் 75 வாக்குகள்... ஒலிம்பிக் கனவில் புதிய சகாப்தம் - 40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் ஐஓசி அமர்வு

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கூட்டம் இந்தியாவில் நடக்கவிருப்பது இது இரண்டாவது முறை.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது ஐஓசி அமர்வு என்பது, அந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டம் ஆகும். இந்தக் கமிட்டியே ஒலிம்பிக்கை நடத்தும் நகரங்களை தேர்வு செய்வது, ஒலிம்பிக் சாசனத்தை திருத்தம் செய்வது, பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளில் முடிவெடுக்கும் என்பதால், ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐஓசி அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments