Advertisement

எனக்கு நானே தலைவன்தான்... - கேப்டன் பதவி குறித்து விராட் கோலி ஓபன் டாக்

புதுடெல்லி: ஐபிஎல் ஏலத்தில் முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பழைய நினைவலைகளை முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டது "வாழ்க்கையில் தனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தருணம் அது" என்று விவரித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் வலையொளி நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, "2008-ம் ஆண்டு அது. U-19 உலகக் கோப்பைக்காக மலேசியாவில் இருந்தபோது ஏலம் தொடங்கியது. அப்போது ஜூனியர் அணியில் நான் இல்லை. இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், ஒருவர் ஏலம் எடுக்கப்படுவதில் இருக்கும் தடைகளை அப்போதுதான் நான் பார்த்தேன். ஆனால், அந்த தருணமும் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த ஏலத்தில் நான், சித்தார்த் கவுல், ரவீந்திர ஜடேஜா, மணீஷ் பாண்டே உட்பட U-19 அணியில் விளையாடிய 14 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments