Advertisement

’மிகுந்த நேர்மையுடன் அணுகுவேன்’ - பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால்

சண்டிகர்: ஐபிஎல் 15-வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு சென்ற நிலையில், மயங்க் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஷிகர் தவான் அணியில் இருந்தும் மயங்க் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2018-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் மயங்க் அகர்வால். துணை கேப்டனாகவும், கடந்த சில சீசனில் சில போட்டிகளில் கேப்டனாகவும் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உள்ளதை அடுத்து, தற்போது நிரந்தர கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பேசிய மயங்க், "2018 முதல் இந்த அற்புதமான அணியின் ஓர் அங்கமாக இருந்து வருகிறேன். கேப்டன் என்கிற பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் அணுக விரும்புகிறேன். அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள திறமைகளைக் கொண்டு இந்த சீசனில் எனது பணி எளிதாக அமையும் என நம்புகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments