Advertisement

'அர்ஜுன் விளையாடுவதை பார்க்க மாட்டேன்' - மகன் குறித்து மனம் திறந்த சச்சின்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். மேலும், அப்படிப் பார்த்தால் தேவையில்லாத மன அழுத்தத்துக்கு அர்ஜுன் ஆளாவர் எனவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். சமீபத்தில் நடந்த முடிந்த ஏலத்திலும் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. அர்ஜுன் இதுவரை அண்டர் 19 இந்திய அணிக்காக, மும்பை அணிக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாடியுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் இன்னும் ஒருமுறை கூட தன் மகன் விளையாடியதை நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments