Advertisement

U-19 உலகக் கோப்பை: நம்பிக்கை தரும் இளம்படை - இறுதிக்கு முன்னேறி வரலாறு படைக்குமா இந்தியா?

ஆண்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆண்டிகுவா தீவுகளில் நடந்துவருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி, வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கேப்டன் யாஷ் துல், ஷாயிக் ரஷித் போன்ற வீரர்கள் கரோனா பாதிப்பு ஏற்பட, மற்ற வீரர்களை கொண்டு அனைத்து எதிரணிகளையும் எளிதாக சாய்த்தது இந்தியா. இறுதிப்போட்டிக்கு முன்னதாக, கரோனா பாதிப்படைத்த வீரர்கள், அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதனால் இந்திய அணி இன்னும் பலமாக உள்ளது. என்றாலும் அவர்களின் ஃபார்ம் குறித்த நிலைதான் தெரியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments